நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார் – ஐ.தே.க. தெரிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று ஐ.தே.கவின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் ஊடாகவேனும் அவர் நாடாளுமன்றம் வரமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி மற்றும் கூட்டணியை அவர் வழிநடத்துவார் என்றும் ருவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.