அனைத்து அரசியல் கட்சிகளும் அனுரவுக்கு ஆதரவளிக்க வேண்டும் : வஜிர அபேவர்தன.

மக்கள் ஆணையை அமுல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் அநுர திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ரணிலின் வேலைத்திட்டத்தை விட அநுரவின் வேலைத்திட்டத்தின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிவித்த அபேவர்தன, மீண்டும் வரிசை யுகம் ஏற்படாத வகையில் ஜனாதிபதி திஸாநாயக்க செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான , சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த வஜிர அபேவர்தன,

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்ட குழுக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர்.

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு 42% ஆணை வழங்கியதன் மூலம் இலங்கைப் பொதுமக்கள் பெரும் பொறுப்பை வழங்கியுள்ளனர்.

அந்த பொறுப்பை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.