120 பில்லியன் பெறுவதற்காக கருவூல பில்கள் விற்கப்படுகிறது.

ஒரு இலட்சத்து இருபதாயிரம் மிலியன் ரூபா பெறுமதியான திறைசேரி (கருவூல) உண்டியல்களின் ஏலம் இன்று (25ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

91 நாட்களில் முதிர்வடையும் 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 10,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் இன்றைய தினம் ஏலம் விடப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த கருவூல உண்டியல்கள் வழங்குதல் மற்றும் செலுத்துதல் செப்டம்பர் 27 அன்று செய்யப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.