8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவியேற்பு.

இலங்கையின் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்பாக இன்று பதவியேற்றனர்.

இலங்கையின் 9 மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணங்களுக்கான ஆளுநர்களே இன்று பிற்பகல் 2 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

இவ்வாறு பதவியேற்ற 8 ஆளுநர்களும் அந்தந்த மாகாணங்களில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.