யாழ். மாவட்டத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு! – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இதுவரை 7 ஆக இருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் மூலம் 6 பேர் மட்டுமே தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்புமனுவில் உள்ளடக்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலிலேயே யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆகக் குறைவடைந்தமை கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.