ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளராக பரணீதரன் – குருசாமியின் இராஜிநாமாவை அடுத்து அரசியல் குழு தீர்மானம்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் இராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, இந்த இராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு, காலியான பொதுச்செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரனை ஏகமனதாக நியமித்தது.

முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்குக் கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகின்றார்.

மேலும், இன்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில், எதிர்வரும் 29ஆம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள தமிழர் முற்போக்குக் கூட்டணி அரசியல் குழுவில் கலந்து பேசி அங்கே எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்படுவது எனவும் தீர்மானிக்கபட்டது.

Leave A Reply

Your email address will not be published.