வடக்கு ஆளுநர் வேதநாயகன் கடமையேற்பு!

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எளிமையாக நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வு இன்று வெள்ளிகிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் ஆளுநர் சர்வமதத் தலைவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரம் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடந்த 23 ஆம் திகதியன்று தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஐனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகலிங்கம் வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மிக எளிமையான முறையில் நடைபெற்ற இன்றைய கடமையேற்பு நிகழ்வில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.