கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் ஓர் அறிவிப்பு! விழாக்களுக்கு பணம் சேர்க்கக் கூடாது

உலக சிறுவர் தினத்திற்காக நாடு முழுவதும் உள்ள பல பாடசாலைகள் பெற்றோரிடம் பணம் வசூலிப்பதாக கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெற்றோர்கள், மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, அதிபர்கள், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

பிந்திய செய்தி

உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை பாடசாலைகளில் கொண்டாடுவதற்கு பெற்றோர்களிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் ஜே. எம். திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதவாறு அதிபர்கள் உறுதியளிக்க வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.