சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் உறவுகள் செவ்வாயன்று போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் எதிர்வரும் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கலாரஞ்சினி தெரிவிக்கையில்,

“தொடர்ச்சியாக மாதத்தின் இறுதி நாளாகிய 30 ஆம் திகதி எமது உறவுகளைத் தேடிய போராட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இம்மாதம் அதாவது 30.09.2024 அன்று நடைபெற இருக்கின்ற போராட்டத்தை 01.10.2024 முதலாம் திகதி சிறுவர் தினமான அன்று முன்னெடுக்கவுள்ளோம்.” – என்றார்.
………………

Leave A Reply

Your email address will not be published.