Apple iPhone பாகங்களை உற்பத்தி செய்யும் Tata Electronics ஆலையில் தீ.

தமிழ் நாட்டில் இயங்கும் Tata Electronics ஆலையில் மூண்ட தீயால் உற்பத்தி நடவடிக்கைகள் நின்றுபோனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆலையில் Apple iPhone பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சம்பவத்தில் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

தீச்சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படும் என்றும் அதன் ஊழியர்கள் பார்த்துக்கொள்ளப்படுவர் என்றும் Tata Electronics சொன்னது.

நடைபாதை தீயில் சேதமுற்றிருப்பதால் உள்ளே நுழைய முடியவில்லை என்று மாவட்ட மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீயின் அனல் அடங்க ஒருநாள் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

சேதவிவரங்கள் பின்னர் கணக்கிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீச்சம்பவம் குறித்து Apple நிறுவனத்திடமிருந்து உடனடியாகத் தகவல் எதுவும் வரவில்லை என்று Reuters செய்தி சொன்னது.

Leave A Reply

Your email address will not be published.