தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து பார் லைசென்சுகளும் ரத்து.

கடந்த அரசாங்கத்தினால் முறைசாரா முறையில் வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களையும் உடனடியாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உரிமங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுர திஸாநாயக்க, கலால் வரி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பலரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த உரிமங்களை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்த முழுமையான அறிக்கை உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு கிட்டத்தட்ட 300 மதுபானக் கடைகளுக்கு வழங்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளது.

இதற்கு முன் முறைசாரா முறையில் வழங்கப்பட்ட மதுக்கடைகளின் உரிமம் குறித்து இங்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.