கணவாய் பிடிக்கக் கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் மாரடைப்பால் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் கணவாய் பிடிப்பதற்குக் கடலுக்குச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

காக்கைதீவு, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மேற்படி நபர் உட்பட சக தொழிலாளர்கள் என 5 பேர் நேற்று கணவாய் பிடிப்பதற்குக் கடலினுள் தடி நடுவதற்காகப் படகில் சென்றனர். இதன்போது மேற்படி நபர் திடீரென மயக்கமடைந்தார்.

அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

மாரடைப்பால் மரணம் சம்பவித்தது என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்தது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.