இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் அரிசி மற்றும் கொத்து

அரிசி மற்றும் கொத்து விலையை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்காத கறுப்புச் சந்தை வர்த்தகர்களை தண்டிக்க வேண்டும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

சமீபகாலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை கிடைத்த தகவலின் படி பேக்கரியில் கிடைக்கும் பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.