சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்புக் குழு அக். 02 இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைத் தூதுவர் பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவொன்று ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அப்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வந்திருந்தது. இதன்படி, இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அந்த முடிவின்படி, இலங்கை அரசு சர்வதேச நாணய நிதியத்துடன் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தில் இறங்கியது. இதன் விளைவாக, அவ்வப்போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்குச் சென்று அதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்கின்றனர்.

அந்த ஒப்பந்தங்களின்படி இலங்கைக்கு இதுவரை இரண்டு கடன் தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பான மீளாய்வு அமர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த விஜயத்தின் போது புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், நிதியமைச்சின் தலைவர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.