முழுமையான ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா? : ரஞ்சன் (Video)

தமக்கு பூரண ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்குமா என புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கேட்டுள்ளார்.

தனது சகோதரியை சந்திக்க சென்ற அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியிருந்த வேளையில், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனைக் கேட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட போதிலும், அது முழுமையான ஜனாதிபதி மன்னிப்பாக இருக்கவில்லை.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் பேசவோ அல்லது அதில் ஈடுபடவோ அவருக்கு தடை இருந்தது. அவரால் கலைத் துறையில் ஈடுபடமட்டுமே முடிந்தது. எனவே ரஞ்சன் அநுரவுக்கு ஆதரவான சில மேடைகளில் பாடல்களை பாடினார். அரசியல் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.