முன்பள்ளிக்கு செல்ல முடியாது எனக் கூறிய ஐந்து வயது மகளை எரித்த தாய் கைது!

ஐந்து வயது மகளின் உடலை கரண்டியை சூடாக்கி எரித்ததாகக் கூறப்படும் தாய் ஒருவரை கண்டி காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.

தனது மகள் முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததால் தாயே குழந்தையை எரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீக்காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகஸ்தன்ன பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் முப்பது வயதுடைய தாயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தி வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில், பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.