பிரபுக்களின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான தீர்மானம் இன்று…

முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று 5 மணிக்கு விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அமைச்சில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறிப்பிட்டதாக நியூஸ் ஃபர்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார்.

பற்றாக்குறைக்கு விடையளிக்கும் வகையில் இதுவரையில் ஏனைய கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களை முறையான முறையில் அரச சேவையில் ஈடுபடுத்தி குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.