மட்டக்களப்பில் போட்டியிடுவதற்கு 3 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 3 சுயேச்சைக் குழுக்கள் இன்று திங்கட்கிழமை மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணங்களைச் செலுத்தியுள்ளன.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணங்களைச் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தலைமையில் சுயேச்சைக் குழுவில் 8 பேர் போட்டியிடுவதற்காக முதன்முதலாகக் கட்டுப்பணத்தை இன்று மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளார்.

அதேவேளை, மட்டக்களப்பு, நல்லையா வீதியைச் சேர்ந்த அரச திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வுபெற்ற 81 வயதுடைய கனகசூரியம் சோமாஸ்கந்தமூர்த்தி தலைமையில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடுவதற்கு 8 பேருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அலிஹார் மௌலானாவின் ஊடக செயலாளர் அஸ்மி தலைமையில் சுயேச்சைக் குழுவில் 8 பேர் களமிறக்கப்பட்டு அதற்கான கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.