பத்தரமுல்லையில் போராட்டம்.. போக்குவரத்து நெரிசல்.

பத்தரமுல்ல பெலவத்தை சந்திக்கு அருகில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர்கள் குழு கோரிக்கை விடுத்திருந்தது.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் முன்னதாக வெளிவந்துள்ளதா என்பதைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழு, மறு பரீட்சையை நடத்தாமல் அனைத்து பிள்ளைகளுக்கும் அந்த 3 கேள்விகளுக்கான மதிப்பெண்களை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தது.

ஆனால், மூன்று கேள்விகளுக்கு மட்டும் மதிப்பெண் அளிப்பதால் பயனில்லை என்றும், தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.