நான் குருநாகலில் இருந்து அல்ல.. அம்பாந்தோட்டையில் இருந்தே வருவேன் – நாமல் ராஜபக்க்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் தம்மை அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்த அம்பாந்தோட்டை மாவட்ட மக்களை நன்றியுடன் நினைவுகூரும் நாமல் ராஜபக்ஷ, தமக்கு அன்பான அம்பாந்தோட்டை மாவட்ட மக்களுடன் இணைந்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடப் போவதாகவும் குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடும் மாவட்டங்கள் மற்றும் அது தொடர்பான இறுதி உடன்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலில் போட்டியிடுவார் என விளம்பரப்படுத்துவது வெறுமனே அரசியல் இலாபம் தேடும் மக்களை தவறாக வழிநடத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.