நாம் மீண்டெழுவோம்! – துரோகிகளுக்கு வேட்புமனு இல்லை என்று அறிவித்துள்ளது மொட்டுக் கட்சி.

“நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு சென்ற எவருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சியைக் காட்டிக்கொடுத்த எவரும் மீண்டும் கட்சிக்கு வரமுடியாது. மக்களுக்கு வேண்டாம் என்றால் சலூன் கதவைப் பூட்டுவதற்குத் தயார் என மஹிந்தவும் அறிவித்துவிட்டார். எனவே, அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படமாட்டாது.

மொட்டுக் கட்சிக்கு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டுள்ளது. நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்றார்.
……………..

Leave A Reply

Your email address will not be published.