வெள்ளவத்தையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

இன்று வியாழக்கிமை பிற்பகல் வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் எனவும், அவருக்கு 45 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.

இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.