வடக்கு கிழக்கில் , சுயேச்சையாகக் களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியினர்

வன்னி மாவட்டத் தேர்தல் தொகுதியின் பிரதம வேட்பாளராக, புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் முத்தையா புஸ்பராசாவை நியமித்துள்ளதாகப் புனர்வாழ்வளிக்கப்பட்ட, தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (03.10.2024) வியாழக்கிழமை வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்திய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியினர், நாளைய தினம் (04.10) யாழ்ப்பாணத்திலும் நாளை மறுதினம் (05.10) அம்பாறையிலும் கட்டுப்பணத்தைச் செலுத்தவுள்ளனர்.

வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் சுயேச்சையாகக் களமிறங்குவதற்கான நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டு வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சியினர், தங்களுக்கு அனுசரனை வழங்கும் புலம் பெயர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, முன்னாள் விடுதலைப்புலிகள் மற்றும் மக்கள் , தங்களுக்குக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவார்களென எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.