பேசாலையில் சட்டவிரோதமாய் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள்.

மன்னார் பேசாலையில். உள்ள கடை ஒன்றிலிருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 30 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் வியாழக்கிழமை(3.10)மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதை வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பிரிவினர் தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார்  விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளையும், அதை வைத்திருந்த பெண்ணையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.