யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியீடு.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் கனலி மாணவர் சஞ்சிகை ஐந்தாவது இதழ் வெளியிடும் நிகழ்வு ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீசங்கீர்த்தனன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணி தொடக்கம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமும் கலந்துகொண்டனர்.

சஞ்சிகையைகே கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம் வெளியிட முதல் பிரதியை யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பெற்றுக்கொண்டார்.

யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்தச் சஞ்சிகை வெளியீட்டில் மாணவர்களுக்கான வாழ்த்துரைகளை ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர் அனுதர்ஷி கபிலனும், சஞ்சிகைக்கான கருத்துரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர் த.அஜந்தகுமாரும், சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் ஆகியோரும் வழங்கினர்.

ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட மாணவர்களால் உருவாக்கப்பட்ட கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கியே வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


………………………….

Leave A Reply

Your email address will not be published.