இந்திய வெளிவிவகார அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் SJB தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் விசேட சந்திப்பு (04) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

அங்கு சஜித் பிரேமதாச, தற்போது நாடு எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

தற்போதைய திவால் நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா இதுவரை வழங்கிய பாரிய ஆதரவிற்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாக SJB தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்

மேலும், சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால நண்பர் என்ற வகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான உறவு தொடரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.