3 நாளில் 3 கொலை – கனடாவில் பெண் மீது குற்றச்சாட்டு

கனடாவில் ஒன்ட்டாரியோ (Ontario) மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கொலைகள் செய்துவந்ததாகக் கூறப்பட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது 3 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மாண்டவர்கள் 60 வயதுப் பெண், 47 வயது ஆடவர், 77 வயது ஆடவர் என்று தெரியவந்தது.

சப்ரினா கோல்டார் (Sabrina Kauldhar) என்ற அந்த 30 வயதுப் பெண் டொரோன்ட்டோவிலுள்ள (Toronto) ஹோட்டல் ஒன்றில் கைதுசெய்யப்பட்டார்.

ஒவ்வொரு கொலையிலும் கிடைத்த தகவல்கள் அந்தப் பெண்ணுடன் தொடர்புடையதாய் இருந்தன என்று காவல்துறை கூறியது.

Leave A Reply

Your email address will not be published.