பார் அனுமதி பெற்ற தொழிலதிபர்கள் நடுத்தெருவில்.. பணமுமில்லை.. உரிமமும் இல்லை..

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட வர்த்தகர்கள் தற்போது பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் கூட்டங்களின் போது, ​​முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாகக் கூடிய அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காக மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

இவ்வாறு வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும் என தேசிய மக்கள் சக்தி கூட்டங்களில் தெரிவித்தது.

அதன்படி, அவை ரத்து செய்யப்பட்டால், மதுபான உரிமம் பெற்ற அரசியல்வாதிகளிடம் கோடிக்கணக்கில் பணம் செலுத்திய வர்த்தகர்களின் பணமும், மதுபான உரிமமும் பறிபோகும் அபாயம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.