யாழில் உண்ணிக்காய்ச்சலால் இளம் யுவதி ஒருவர் உயிரிழப்பு.

உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஜா என்ற 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.

மேற்படி யுவதி காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் உண்ணிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டு 10 நாட்களாகத் தொடர் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.