முதலையால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!

முதலை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் – கெமுனுபுர பிரதேசத்தில் மொர ஓயாவைக் கடந்து சென்ற 60 வயதுடைய குடும்பஸ்தரே முதலை தாக்கி உயிரிழந்துள்ளார்.

மொர ஓயாவுக்கு அருகில் ரஞ்சித் மங்கட என்கின்ற பகுதியில் மூன்று பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அவர்களில் ஒருவர் இறைச்சி எடுத்துக்கொண்டு வருதற்காக தனது வீட்டுக்குச் செல்ல மீண்டும் மொர ஓயாவைக் கடக்கும்போது முதலையால் தாக்கப்பட்டார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஸ்ரீபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.