முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நீண்டகாலமாக நிரந்தர நியமனம் கிடைக்காமை வருந்த தக்க விடயம்- அரச அதிபர் கனகேஸ்வரன்.

“நீண்டகாலமாகப் போராடியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமை என்பது  மனம் வருந்தத்தக்க விடயமென மன்னார் அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.”

இன்றையதினம் (06.09) ஞாயிறு காலை 9 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சர்வதேச ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.      இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுகுழந்தைகளைக் கையாள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. முன்பள்ளி்ஆசிரியர்கள் குழந்தைகளை மிகவும் கவனமாகப் பராமரித்து கல்வி புகட்டுபவர்கள்.அவ்வாறான மகத்துவமான வேலையைச் செய்கின்ற அவர்கள் போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் மிக நீண்டகாலமாக நிந்தர நியமனத்துக்காகப் போராடியும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் கஸ்டப்பட்டு வேலை செய்கின்ற போதிலும் மிகக்குறைவான ஊதியத்தையே பெற்றுக் கொள்கிறார்கள்.”

“நீண்டகாலமாக ஆசிரிய சேவையாற்றி இறுதிவரை அங்கீகாரம் கிடைக்காமலே பல முன்பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள்.

எனவே இந்த நிலை மாறவேண்டும். எத்தனை உயர்கல்வி கற்று வந்தாலும் சிறுவயதில் கற்பித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை யாரும் இலகுவில் மறப்பதில்லை

அவ்வாறான ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க நாமும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். இந்தப் புதிய அரசாங்கம் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டும் என்றார்.”

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்.கனகேஸ்வரன். கலந்து கொண்டதோடு, பிரதேச செயலாளர். முன்னாள்உதவிக் கல்வி பணிப்பாளர்கள். கல்வி அபிவிருத்தி குழுக்கள். ஆசிரியர்ஆலோசகர்கள். மன்னார் மாவட்ட மாதர் சங்கத்தின் தலைவி. அரசு சார்பற்றநிறுவனங்களின் பிரதிநிதிகள். நகர சபை செயலாளர், சமயத்தலைவர்கள்  மற்றும் இருநூறிற்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் முன்பள்ளி ஆசிரியைகள் கலைநிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியதோடு பிரதம அதிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், நீண்டகால சேவையாற்றிய  முன்பள்ளி ஆசிரியர்கள் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

ரோகினி நிஷாந்தன்



Leave A Reply

Your email address will not be published.