கடன் பிரச்சனை உடனே தீரும்.. உகண்டாவில் உள்ள பணத்தை கொண்டு வர ராஜபக்சவினர் சம்மதம்.. IMF யை விட 6 மடங்கு அதிகமான சொத்து?

சீஷெல்ஸ் தீவுகளிலும் , உகண்டாவிலும் ராஜபக்சக்களால் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்துக்களை மீளக் கொண்டுவருவதற்கு தானும் தனது தலைமுறையினரும் அதிகபட்ச ஆதரவை வழங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ராஜபக்சேவால் திருடப்பட்ட பணம் உகாண்டாவில் இருந்தால், அந்தப் பணத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம். எங்களுக்குத் தெரிந்த யாராவது உகாண்டாவில் இருந்தால், இந்த விடயத்துக்கு உதவுங்கள் என சவால்விடுத்து பேசியுள்ளார் .

அவற்றை கொண்டு வந்தால், இலங்கை கடனை அடைப்பது பிரச்னையே இல்லை. 18 பில்லியன் டாலர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியானால் IMF மும் தேவையில்லை, உலக வங்கி கடனும் தேவையில்லை என்றார் அவர்.

எனது குடும்பத்தினரும், எங்கள் கட்சியும் அதிகபட்ச ஆதரவை வழங்கும், தயவுசெய்து அந்தப் பணத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வாருங்கள் என்றார் நாமல் ராஜபக்ஷ .

சொத்து தொடர்பான ஒரு ஆங்கில கட்டுரை
https://www.colombotelegraph.com/index.php/one-family-one-set-of-looters/

Leave A Reply

Your email address will not be published.