பொதுத் தேர்தலில் சஜித் , பிரதமராவது உறுதி : பழனி திகாம்பரம் நம்பிக்கை.

இந்த வருட பொதுத் தேர்தலில் SJB மாபெரும் வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் (06) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பழனி திகாம்பரம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பழனி திகாம்பரம், ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தாலும், பொதுத் தேர்தலில் அவ்வாறான பெரும்பான்மை வழங்கப்படாது.

யானை அடையாளத்துடன் அல்லது எரிவாயு உருளை சின்னத்தில் தொங்கியவாறு தொழிற்சங்க தலைவர்கள் குழு ஒன்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர முயற்சிப்பதாகவும், தோட்ட மக்கள் யானையையும் எரிவாயு சிலிண்டரையும் நிராகரித்துள்ளதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகள் இடம்பெற்ற நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கேற்ப சிலர் அரசியலில் இருந்து என்றென்றும் விடைபெற்றுள்ளதாகவும் சிலர் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் தாம் இதுவரையில் பெற்றதில்லை எனவும், அதற்கேற்ப அடுத்த பாராளுமன்றத்திலும் இதே முறையை பின்பற்றவுள்ளதாக பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போது தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரும்பிய ஒருவராக இருந்ததாகவும், தற்போது அவர் நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளதன் மூலம் அந்த மக்களுக்காக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பழனி திகாம்பரம் மேலும் தெரிவித்தார். .

Leave A Reply

Your email address will not be published.