முன்னாள் எம்.பி. சிவசக்தி ஆனந்தன் இம்முறை பாேட்டியிலிருந்து விலகல்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் பாேட்டியிடப் பாேவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயகத் தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் பாேட்டியிடுகின்றது.

இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தாெகுதியில் பாேட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் பாேட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.