திருகோணமலையில் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதான அமரசிங்க ஆராச்சி லாகே சுமித் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.