போதியளவு அத்தியாவசிய உணவுகளை இறக்குமதி செய்யுங்கள் : அநுர

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களின் இறக்குமதி தொடர்கிறது.

சில நாடுகளில் நிலவும் இராணுவ மோதல்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடையாக இல்லை என்று சங்கம் கூறுகிறது.

எதிர்வரும் உற்சவ காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

பண்டிகைக் காலத்தில் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சங்கப் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.