ஈஸ்டர் ஆணை அறிக்கையில் பக்கங்கள் இல்லாதது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது : விஜித ஹேரத்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனமை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், அந்த விசாரணைகளின் உண்மைகள் விரைவில் வெளிவரும் என்றார்.

குறித்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்துப் பக்கங்களும் உள்ளதா என்பதை விசாரணைகளின் மூலம் கண்டறிய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.