கொழும்பில் இருந்து பிரதமர் ஹரிணி தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக !

தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய அக்கட்சியின் வேட்பு மனுவில் நேற்று (08) கையொப்பமிட்டுள்ளார்.

இது தவிர மற்ற வேட்பாளர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தின் மாவட்டத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, காலி மாவட்டத்திற்கான நளின் ஹெவகே தலைமையிலான குழுவும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு நிஹால் கலப்பட்டி குழுவும், கம்பஹா மாவட்டத்திற்கான மஹிந்த ஜயசிங்க குழுவும் நேற்று வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.