ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று 9 உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்பான் ஹோட்டலில் தேசிய படை அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது குரானை அவமதித்த வழக்குக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததற்காகவே இப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விசாரணை மார்ச் 5, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.