பல இலட்சம் ரூபா பணத்தை வீதியில் எறிந்த நபர் கைது!

பல இலட்சம் ரூபா பணத்தை வீதியில் எறிந்த குற்றச்சாட்டில் யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அராலியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு தொகைப் பணத்தை அவர் தீயிட்டு எரித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகநபரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமையவே அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.