வன்னியில் ஜனநாயக இடதுசாரி முன்னணி வேட்புமனு.

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்று புதன்கிழமை தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலயத்தில் இன்று வேட்புமனுவை முன்னணியினர் தாக்கல் செய்த்தனர்.

இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.