ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வன்னியில் இன்று வேட்புமனுத் தாக்கல்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் இன்று வியாழக்கிழமை தாக்கல் செத்தனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

அவர்கள் இன்று மதியம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலாநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவனேசன், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, முன்னாள் போராளி யசோதினி, சமூகச் செயற்பாட்டாளர் மூர்த்தி, வர்த்தகர் அ.றொயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.