தமிழரசின் கொள்கை வெல்ல வாக்களியுங்கள்! – மக்களிடம் மாவை பகிரங்க வேண்டுகோள்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரனால், யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், கட்சியின் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெறச் சென்ற சிறீதரனுக்கு வாழ்த்துரைத்தபோதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.