கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா! – யாழில் சுயேச்சையாகப் போட்டி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இன்று வியாழக்கிழமை கட்டுப்பணம் செலுத்தினார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் கட்டுப்பணத்தை அவர் செலுத்தினார்.

வைத்தியர் அர்ச்சுனா சுயேச்சையாகப் போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.