யாழில் மக்கள் போராட்ட முன்னணியும் வேட்புமனு!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மக்கள் போராட்ட முன்னணியினர் இன்று வியாழக்கிழமை கையளித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 11 மணியளவில் மக்கள் போராட்ட முன்னணியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் செயலாளர் சி.கா.செந்திவேல் உள்ளிட்ட குழுவினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

மக்கள் போராட்ட முன்னணியினர் குடைச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.