யாழில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு!

நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவைக் கையளித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராக க.இளங்குமரன் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.