4 மாவட்டங்களில் தமிழரசு நேற்று வேட்புமனுத் தாக்கல் – திருகோணமலையில் இன்று.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, திருகோணமலை தவிர்ந்த 4 மாவட்டங்களில் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வியாழக்கிமை 4 மாவட்டங்களில் வேட்புமனுக்களைத் தமிழரசுக் கட்சியினர் தாக்கல் செய்தனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

அந்தவகையில் யாழப்பாணம் மாவட்டத்துக்கான வேட்புமனு முதன்மை வேட்பாளர் சி.சிறீதரன் ஊடாகவும், வன்னி மாவட்டத்துக்கான வேட்புமனு முதன்மை வேட்பாளர் ப.சத்தியலிங்கம் மூலமாகவும், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான வேட்புமனு முதன்மை வேட்பாளர் இரா.சாணக்கியன் ஊடாகவும் மற்றும் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனு முதன்மை வேட்பாளர் த.கலையரசன் மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டன.

திருகோணமலை மாவட்டத்துக்கான வேட்புமனு அந்த மாவட்ட முதன்மை வேட்பாளர் ச.குகதாசனால் இன்று வெள்ளிக்கிழமை காலை தாக்கல் செய்யப்படவுள்ளது.
……………..

Leave A Reply

Your email address will not be published.