திசைகாட்டி தேசிய பட்டியலில் வழியாக மாற்றுத்திறனாளி ஒருவர் நாடாளுமன்றம் வரவுள்ளார்.

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் பிரதிநிதியும் இடம்பெற்றுள்ளார்.

இலங்கை தேசியப்பட்டியலில் இவ்வாறான ஒரு வேட்பாளர் உள்வாங்கப்பட்டமை இந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

தேசிய மக்கள் சக்தி தனது வேட்பு மனுக்கள் அனைத்தையும் ஏற்கனவே தயார் செய்துள்ள நிலையில், அது இன்று தேர்தல் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.