நாமல் , மொட்டின் தேசிய பொக்கிஷமாகுறார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அந்த முன்னணியின் தேசியப் பட்டியலில் இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கட்சியின் வெற்றிக்காக நாடளாவிய ரீதியில் சென்று ஒழுங்கமைக்க வேண்டியிருப்பதால் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை பரிசீலித்து வருவதாக கட்சி குறிப்பிடுகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற தேர்தல் முடிவுகளின்படி எந்த மாவட்டத்திலும் ஒரு ஆசனத்தையாவது பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை, ஆனால் தேசியப் பட்டியலில் இருந்து ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. எனவே ஏனையோரை போட்டியிட வைத்து நாமல் தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் வர முயல்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.