வன்னியில் கங்காரு சின்னத்தில் காதர் மஸ்தான் இம்முறை போட்டி

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கைத் தொழிலாளர் கட்சியின் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.